2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக பத்து இலட்சம் கையெழுத்துகள்

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து, பத்து இலட்சம் கையெழுத்துகளுடனான மனுவொன்றை முன்வைக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் முதற் கட்ட நடவடிக்கை களுத்துறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, உலக சுகாதார ஸ்தாபனத்திடம் முறையிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .