2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

’அரசாங்கத்துக்கு ஒரு மாதம் காலக்கெடு’

Editorial   / 2018 டிசெம்பர் 27 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு மாதத்துக்குள் தமக்கு அமைச்சுப் பதவியொன்று கிடைக்காவிடின் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிவருமென புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார எச்சரித்துள்ளார்.

நேற்றைய தினம் ஆடிகம- சியம்பலாவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்​கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் திருப்புமுனையே ரங்கே பண்டார தான் என எல்லோரும் கூறுகின்றனர். ஆனால் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு ஒரு மாதமாகவுள்ள நிலையில், இன்னும் தனக்கு எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே புத்தளம் மாவட்ட மக்களுக்காக தான் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அடுத்த வருடம் முதல் மாதத்துக்குள் அமைச்சுப் பதவி ஒன்று கிடைக்காவிடின் தான் கடுமையான தீர்மானமொன்றை எடுக்க வேண்டி வருமென்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .