2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘அரசியல் குழுக்களின் செயற்பாடுகள் வெறுப்பை ஏற்படுத்துகின்றன’

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இல்லாமல் ​போன அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக சில அரசியல் குழுக்கள்  மேற்கொள்ளும் முயற்சிகள் வெறுப்பை ஏற்படுத்துவதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எந்​தவொரு இனம் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகிறதோ, அந்த இனம் அழிந்து விடும் அப்படியில்லையெனில் அதன் பலனை சகலரும் அனுபவிக்க வேண்டி வருமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருநாகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அமைச்சர் அகிலவிராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சில அரசியல் குழுக்கள் இனவாதம், மதவாதம், பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி, தமக்கு இல்லாமல் போன அதிகாரங்களை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும்  அமைச்சர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .