2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அரச கரும மொழிகள் வாரம் ஆரம்பம்

Editorial   / 2019 ஜூலை 01 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதுவரை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாத அரச கரும  மொழிகள் கொள்கையை செயற்படுத்துவதற்காக, இன்றிலிருந்து அரச கரும மொழிகள் வாரமாக அறிவிக்கபட்டுள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்றிலிருந்து 5ஆம் திகதி வரை  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நிகழ்வுகளில் இன்று முதலாவது நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது நிகழ்வு நாளை கொழும்பு- இசிபத்தான பாடசாலையிலும் 3ஆம் நாள் நிகழ்வு பொதுமக்கள் தினம் என  பெயரிடப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் கொழும்பு- கோட்டை பிரதேசத்தில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன இந்த நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .