2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

‘அருவக்காட்டில் பாரிய வெடிப்பு’

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின், ஜூட் சமந்த, ஹிரன் பிரியங்கர

அருவக்காடு குப்பை சேகரிக்கும் பிரிவில் நேற்று (07) இரவு ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தையடுத்து, அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் அப்பகுதியை சோதனையிட  நடவடிக்கை  எடுத்துள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும், அருவக்காடு குப்பை சேகரிக்கும் பிரிவில், எம்.ஆர்.சி 1 பகுதியில் மீதென் வாயு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, குழாய் ஒன்றில் ஏற்பட்ட  கசிவினால் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த பாரிய கொங்ரீட் தாங்கியொன்று முற்று  முழுதாக  சேதமடைந்துள்ளதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, அங்கு ​செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்களுக்கு உள்ளே செல்ல, அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெடிப்பு இடம்பெற்ற இடத்தை அதிகாரிகள் முழுமையாக மறைத்து வைத்திருந்தனர் எனவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X