2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘அல்-முஸ்தபா பட்டம் செல்லாது’

Editorial   / 2019 மே 10 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்  

ஈரான் அல்-முஸ்தபா பல்கலைக்கழகத்தின் பட்டத்துக்கு இலங்கையில் அங்கிகாரமில்லை என்று தெரிவித்துள்ள ஊவா மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் செந்தில் தொண்டமான், அதுதொடர்பில் உரிய நிறுவனங்கள், கடிதம் மூலமாகத் தனக்கு தெரியப்படுத்தியுள்ளன என்றார்.  

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

“அல்-முஸ்தபா பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புக்கு, இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ, அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவோ, உயர்கல்வி அமைச்சோ அங்கிகாரமளிக்கவில்லை” என்றார். இதேவேளை, குறித்த பல்கலைக்கழகம் இலவசமாகவே பட்டப்படிப்பை முன்னெடுப்பதாக, ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. எனினும், அதற்கு மாறாக கட்டணம் அறிவிடப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், சுமார் 500 மாணவர்களிடம்  அறிவிடப்பட்டுள்ள பணத்தை, அவர்களிடமே திருப்பிகொடுக்கவேண்டும் என்றார்.

அல்-முஸ்தபா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கு ஊவா மாகாணத்தில் உள்ள மாணவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் மூளைச்சலவை செய்துள்ளார். இது தொடர்பில் அவருக்கு எதிராகவும், அந்தப் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

குறித்த பல்கலைக்கழகம் தொடர்பில் குற்றவியல் விசாரணைத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும், ஊவா மாகாணத்தில் அந்தப் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் அனைத்தும் முற்றாகத் தடுத்து நிறுத்தப்படுமெனவும் அவர்  கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .