2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு கோரிக்கை

Editorial   / 2019 ஏப்ரல் 11 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகவேக நெடுஞ்சாலைகளில் வாகன நெருக்கடி பிரச்சினைகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை குறைப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிப்பு பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் நெடுஞ்சாலை வழியாகப் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையானது 80 ஆயிரம் வரையுள்ளதாக, குறித்த பராமரிப்பு பிரிவின் அதிகாரி எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலைகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் நெடுஞ்சாலைகளில் சாரதிகளின் களைப்பு மற்றும் சோர்வின் காரணமாக விபத்துகளும் ஏராளமாக பதியப்பட்டுவருவதாகவும், இதுகுறித்து நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன்  வாகனங்களை செலுத்துமாறும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .