Freelancer / 2025 டிசெம்பர் 25 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
இந்த பண்டிகை, வழக்கத்தை விட வித்தியாசமாக, பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன் மூலம் கொண்டாடப்பட வேண்டும் என்று மல்வத்து மற்றும் அஸ்கிரி அனுநாயக்க தேரர்கள் கூறுகின்றனர்.
மல்வத்து மற்றும் அஸ்கிரி அனுநாயக்க தேரர்கள் என்பவர்கள், கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரி ஆகிய இரண்டு பிரதான பௌத்த பீடங்களின், மகாநாயக்க தேரர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள உயர் குருமார்கள் ஆவர்.
இவர்கள் மேலும் கூறுகையில்,
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று விருந்துகளை நடத்துவதன் மூலம் நாம் மகிழ்ச்சியடைவது போல, பேரிடரை எதிர்கொண்டவர்களுக்கு உதவுவதன் மூலம் கிறிஸ்துமஸ் அர்த்தமுள்ளதாக கொண்டாடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மற்ற காலங்களைப் போலல்லாமல், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில், மனிதநேயத்தின் பெயரால், பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கூறுகின்றனர்.. R
59 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
4 hours ago
5 hours ago