2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஆடை கொள்வனவு செய்​தோர் தொடர்பில் தகவல் அறிந்தால் அறிவிக்கவும்

Editorial   / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 19ஆம் திகதியன்று மீரிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைகள் வர்த்தக நிலையமொன்றில் வௌ்ளை பாவாடை, சட்டைகள் பத்தை கொள்வனவு செய்ய, புர்கா அணிந்து வருகைதந்திருந்த பெண்கள் மூவரையம் மற்றும் அவர்களுடன் வருகை தந்திருந்த அவர்களது வாகன சாரதியையும் அடையாளங்கண்டு கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோருகின்றனர்.

 

குறித்த சந்தேகநபர்கள் எதிர்வரும் வெசாக் மற்றும் பொசோன் போயா தினத்தில் மக்கள் நடமாடும் இடங்களில் கலந்துகொண்டு ஏதேனும் விரோத செயல்களில் ஈடுபடலாமென, பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஆகையால் குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அறியவருமாயின், உடனடியாக பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைத்து தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .