2025 ஜூன் 16, திங்கட்கிழமை

ஆதாரமற்ற போலி பிரசாரங்கள் முன்னெடுப்பு

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் காலப்பகுதியில் அடிப்படையற்ற அறிவிப்புகள் மற்றும் ஆதாரமற்ற போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக, கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, நிறைய தவறான புரிதல்கள் இடம்பெறுவதாகவும் இந்த தவறான புரிதல்களால் இனவாதம் மற்றும் மதவாதம் அதிகரிப்பதாகவும் கபே அமைப்பின் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் தேர்தல் மேடைகளில் மற்றும் சமூக வலைத்தளங்களில் மீண்டும் வெளிவருவதால் சில வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கபே அமைப்பு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .