2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

‘ஆமை இரத்தத்தை தினமும் குடித்தோம்’

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாறுக் ஷிஹான்)

“ஆமை இரத்தத்தை தினமும்  குடித்து,  இறந்த சக மீனவரின் பூதவுடலை ஆறு நாட்களாக உடன் வைத்திருந்த நிலையில் இறுதியாக  கடலில் தூக்கி போட்டோம்“  என 22 நாள்களுக்குப் பின் கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

செப்டம்பர் 18 ஆம்  திகதி கடலுக்கு மீன்பிடிக்கச்  சென்று 22 நாள்களின் பின்னர்  சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36) இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) ஆகிய இருவரும் கரைத் திரும்பியுள்ளனர்.

தங்களுடன் மீன் பிடிக்க வந்த, காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) கடலுக்குச் சென்ற 10ஆவது நாள் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளதோடு, அவரின் உடலை 6 நாள்கள் தங்களோடு வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தங்களை கரைக்குக் கொண்டுவருவதற்கு உதவிய சகோதர இன மீனவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X