2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஆறாவது நாளாக இன்று விசாரணை

Editorial   / 2020 மே 26 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜுன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஆறாவது நாளாக இன்று (26) இடம்பெறவுள்ளது.

குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் 5ஆவது நாளாக கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, தேர்தல் தினத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் விசாரணை இன்றி இரத்து செய்யுமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றிடம் கோரியிருந்தார்.

இந்த நிலையில், குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று வரை ஒத்திவைப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .