2025 ஒக்டோபர் 07, செவ்வாய்க்கிழமை

இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு பாதி சம்பளம்

Editorial   / 2025 ஒக்டோபர் 07 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு அவர்களின் சம்பளத்தில் பாதியை வழங்க முடிவு செய்துள்ளது, அதே நேரத்தில் பல கொடுப்பனவுகளை நீதித்துறை சேவை ஆணைக்குழு (JSC),  நிறுத்தி வைத்துள்ளது.

இந்த முடிவை விவரிக்கும் ஒரு சுற்றறிக்கையை நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்னா அல்விஸ் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நீதிபதிகள் சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் அவர்களின் சம்பளத்தில் 50% பெறுவார்கள் நீதித்துறை சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறைக்கப்பட்ட சம்பளத்துடன் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் குறித்து நீதி அமைச்சகம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பின் தணிக்கை மற்றும் மேலாண்மைக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தொழில்முறை, தனிப்பட்ட, வாழ்க்கைச் செலவுகள் மற்றும் மொழி கொடுப்பனவுகள் மட்டுமே அரைச் சம்பளக் கொடுப்பனவுகளில் சேர்க்கப்படும் என்று குழு முடிவு செய்தது. தொலைபேசி, வாகனம், ஓட்டுநர், புத்தகங்கள், வீட்டு வாடகை, மேல்முறையீடு மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பிற கொடுப்பனவுகள் வழங்கப்படாது.

இந்த முடிவுக்கு இணங்க, நீதித்துறை சேவை ஆணைக்குழு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது, இது அவர்களின் சம்பளத்தில் பாதியைப் பெறுவார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X