Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மேனகா மூக்காண்டி
மோதல்களினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான நிலையான தீர்வொன்றுக்கான தேசிய கொள்கை வகுக்கப்படவிருப்பதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக கூறினார்.
இது தொடர்பாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனால், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு,அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்காக, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்றுப் புதன்கிழமை (17) இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
'இதற்கமைவாக, இதனுடன் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், தேசிய மாகாண மற்றும் மாவட்ட மட்டத்திலான தரப்பினர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மற்றும் இடம்பெயர் சமூகத்தினருடன் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதன் பலனாக, தீர்வுக்கான தேசிய கொள்கை வகுக்கப்படவுள்ளது' என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
32 minute ago
2 hours ago