Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய தினம் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்திய நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
இதன்படி இன்று (29) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்திய நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு அதிகமானளவில் மழை பெய்யக்கூடுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் காரணமாக குறித்த பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடுமென்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
57 minute ago
1 hours ago