2025 ஜூன் 19, வியாழக்கிழமை

இடைக்காலக் கணக்கு அறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது

Editorial   / 2020 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் டிசெம்பர் 31ஆம் திகதி வரையான 04 மாதங்களுக்கான அரச செலவினங்களை மேற்கொள்ளும் ஆயிரத்து 900 பில்லியன் இடைக்கால கணக்கறிக்கை அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த இடைக்கால கணக்கு அறிக்கை வாக்கெடுப்பு ஏதுமின்றி இன்று (28) நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இடைக்கால கணக்கு அறிக்கைக்காக இருநாள் நாடாளுமன்ற விவாதத்தில் இடைக்கால கணக்கு அறிக்கை தொடர்பில் பேசப்பட்டதைவிட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் சர்ச்சைக்குரிய உரை தொடர்பிலேயே அதிகமாக கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .