2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

இந்தியா, ஜப்பான் 3.5 பில்லியன் டொலர் நிதியுதவி

Freelancer   / 2022 மே 14 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்தியத்தூதுவர், அமெரிக்க தூதுவர், சீன தூதுவர் மற்றும் ஜப்பான் தூதுவர் உள்ளிட்ட முக்கிய இராஜதந்திரிகளை நேற்று (13) சந்தித்திருந்த பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து அவரச நிதி உதவியாக 3.5. பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க   இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்திருந்தவுடன் நாட்டின் பொருளாதார மீட்சி, ஸ்திரத்தன்மை உள்ளிட்ட விடயங்களில் இருநாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவது குறித்தும் இலங்கைக்கான பொருளாதார ஒத்துழைப்புக்களை வழங்குவதன் நிலைப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

 இதன்போது இலங்கைக்கு வழங்கும் அவசர நிதியில் இருந்து 1.5. பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு ரணில் வலியுறுத்தியுள்ள நிலையில் அதனை பெற்றுக்கொடுப்பதற்கான இணக்கப்பாட்டை இந்தியா தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேபோல் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் ஹிடேகி மிசுகோஷியுடனான சந்திப்பின் போதும் இலங்கை ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதுடன், அவசர நிதியுதவியில் கீழ் 2 பில்லின அமெரிக்க டொலர் கடன் பெற்றுக்கொள்ளவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதற்கும் ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதேபோல்  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உடனும் பிரதமர் கலந்துரையாடியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7