2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் சிலர் இலங்கை கடற்படைத் தலைமையகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

மேஜர் ஜெனரல் யூ.சுரேஸ் குமார் தலைமையில், 16 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவே நேற்று (27) இலங்கை கடற்படைக்கு விஜயம் செய்திருந்தனர்.

இந்தக் குழுவினர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வாவை சந்தித்துள்ளனர்.

இதன்போது, தேசிய பாதுகாப்பின் நோக்கங்களை அடைவதற்கு, இலங்கை கடற்படையினர் வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில், இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளுக்கு இலங்கை கடற்படையினர் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .