2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இந்து தேசிய மகாசபை யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இந்து தேசிய மகாசபை அமைக்கப்பட வேண்டும் என்று, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன்,

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் என்ற முறையில், தன்னால் முன்வைக்கப்பட்ட இலங்கை இந்து தேசிய மகாசபை அமைவுக்கான பத்திரம், அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இதன்படி, இந்நாட்டில் இந்து சமய விவகாரங்கள் தொடர்பில், தேசிய ரீதியாக ஒன்பது மாகாணங்கள், அனைத்து மாவட்டங்கள், அனைத்து பிரதேச செயலக பிரிவுகள் என்ற அடிப்படைகளில் நாடு தழுவிய வலைப்பின்னல் அமைப்பு சட்டப்படி உருவாக்கப்படும் என்றும் கூறினார்.  

நாடெங்கும் பிரதேச, மாவட்ட சபைகள் உருவாக்கப்பட்டு, அவற்றில் இருந்து தேசிய சபை உருவாக்கப்பட்டு, முழு நாட்டிலும் வாழும் இந்துக்கள் மத்தியில் ஐக்கியத்தையும் ஒரு சமச்சிரான அணுகுமுறையையும், அதேவேளையில், ஏனைய சகோதர மதத்தவருடன் இணக்கப்பாட்டையும், இலங்கை இந்து தேசிய மகாசபை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இதில், நாடெங்குமுள்ள இந்து மத குருமார்கள், ஆலய அறங்காவலர்கள், அறநெறி பாடசாலைகள், இந்து கல்லூரிகள், இந்து சமூக அமைப்புகள் ஆகிய ஐந்து இந்து மத தூண்களும் கூட்டிணைக்கப்படும் என்றும் இந்து மதம் தொடர்பில் அதிகாரபூர்வமாக இந்த நிறுவனம், இலங்கைக்கு உள்ளேயும் வெளிநாடுகளிலும் இலங்கை இந்து மதத்தவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X