2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இப்ராஹிமின் மனைவியின் வீட்டிலிருந்த சந்தேகநபர்கள் ஐவர் கைது

Editorial   / 2019 மே 15 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு- சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் தற்​கொலைத் தாக்குதலை நடத்திய வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையின் உரிமையாளரான மொஹமட் இப்ராஹிம் இன்சாப் அஹமட்டை நினைவுக் கூர்ந்து, மத அனுஸ்டானங்களை நடத்துவதற்கு வருகைத் தந்த இஸ்லாம் மதத் தலைவர் உள்ளிட்ட ஐவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி- மல்வீதியில் உள்ள ​சொகுசு மாடிவீடு ஒன்றில் வைத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர்கள் வருகைத் தந்த ஓட்டோவொன்றும், குறித்த வீட்டில் இருந்து ட்ரோன் கமெராவொன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தற்கொலைதாரியின் மனைவியின் வீட்டுக்கு சந்தேகத்துக்கிடமான சிலர் வருகைத் தந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்தத் தகவலுக்கமையவே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மதத் தலைவர் கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .