Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 08 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
நாட்டு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று(08) அதிகாலை உயிரிழந்தார் என பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இயக்கச்சியைச சேர்ந்த தங்கராசா தேவதாசன் (43) என்ற முன்னாள் போராளியே சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
கடந்த 3ஆம் திகதி மீன் ரின்னுக்குள் சி4 வெடிமருந்தைப் பயன்படுத்தி நாட்டு வெடிபொருள் செய்த போதே வெடிவிபத்து ஏற்பட்டது என்று பளை பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
வெடி விபத்தில் படுகாயமடைந்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக அனுராதபுர வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலையே சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த வெடிப்பு சம்பவத்தையடுத்து அவரது மனைவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே வேளை, முன்னாள் போராளிகள் பலர் தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago
6 hours ago