2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘இரத்தக்கறை படிந்த காருடன் நபர் கைது’

Editorial   / 2019 மே 02 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் நபரொருவர் கல்முனை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த நபரை கைது செய்திருந்த போது, அங்கிருந்து இரத்தக்கறை படிந்த ஈ.ஜீ.கே.எம் 5059 என்ற காரொன்றும், குண்டு தாக்குதல் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் அடங்கிய அலைபேசியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபரை கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .