Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Simrith / 2025 மே 28 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரவில் பாதசாரிகள் கடவைகளில் விளக்குகளை பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) தெரிவித்துள்ளது.
முதல் கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்படக்கூடிய இடங்களில் அமைந்துள்ள பாதசாரி கடவைகளை ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீதிப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவத்திற்கான RDA இன் துணை பணிப்பாளர் நாயகம் கே. சந்திரகுமார தெரிவித்தார்.
இதற்காக சூரிய சக்தி தகடுகள் பயன்படுத்தப்படும் என்று சந்திரகுமார மேலும் தெரிவித்தார்.
இது இரவில் வீதியைக் கடக்கும் பாதசாரிகளை ஓட்டுநர்களுக்கு அதிகமாகத் தெரியும்படி செய்யும் என்றும், விபத்து அபாயத்தைக் குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குருநாகல், காலி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இதுபோன்ற 140 பாதசாரி கடவைகள் ஏற்கனவே ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாக RDA அதிகாரி தெரிவித்தார்.
பாதசாரிகள் கடக்கும் இடங்களில் ஏற்படும் விபத்துகளால் ஆண்டுதோறும் ஏராளமானோர் உயிரிழப்பதால் இந்த முயற்சி செயல்படுத்தப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .