2025 ஜூன் 09, திங்கட்கிழமை

இருவேறு விபத்துகளில் மூவர் பலி

George   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருவேறு பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு விபத்துகளில் 3 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி - மாத்தறை வீதியில் பமுரன்ன சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள், வான் என்பன பின்புறமாக செலுத்த முற்பட்ட போது மோட்டார் சைக்கிள் புரண்டு, எதிரில் வந்த லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அதில் இருவர் உயிரிழந்தனர்.

மாத்தறை, பமுரன பிரதேசத்தைச் சேர்ந்த 21, 22 வயது இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கண்டி - கொழும்பு வீதியில் நிட்டம்புவ நகரத்தில் டிப்பர் வாகனம் மோதி பாதசாரி கொல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

81 வயதுடைய, கவுடுகம பிரதேசத்தைச்சேர்ந்த நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பில் லொறி மற்றும் டிப்பர் சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அந்தந்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5