2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘ இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இங்கிலாந்து ‘

Editorial   / 2019 ஜூன் 27 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரணத் தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்துக்கு இங்கிலாந்து எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மரணத் தண்டனைத் தொடர்பில், இலங்கையிலிருந்து  கிடைக்கும் அறிக்கைகள் குறித்து, மிகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மரணத்தண்டனையை அமுல்படுத்த இலங்கை நடவடிக்கை எடுக்குமாயின், இலங்கையுடனான சட்ட சிக்கல்களில் ​அசௌகரியம் ஏற்படும் என்று இங்கிலாந்தின் வெளிவிவாகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாட்டுக்கு இங்கிலாந்து உதவியளித்து வருவதுடன்  இலங்கையின் பாதுகாப்பு, கொள்கைகளைத் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கும் இங்கிலாந்து வழங்கி வரும் தொழிநுட்ப உதவிகள் குறித்து மீண்டும் ஆராயும் நிலை ஏற்படுமென்றும் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .