2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு போதைப்பொருள் பரிசோதனை

Editorial   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கிரிக்கெட் வீரர்களை, விசேட போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்த, இலங்கைக் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாளைய தினம் (04) நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது, இந்தப் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இதன்போது, எவரேனும் வீரரொருவர், போதைப்பொருள் பாவித்தமை தொடர்பில் கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென, கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் விளையாட்டு வீரர்களைத் தெளிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, போதையில் வாகனத்தைச் செலுத்தில் விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தை அடுத்தே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X