2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இலவசமாக மரக்கன்றுகள் விநியோகம்

Editorial   / 2019 ஏப்ரல் 10 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ‘சுபநேரத்துக்கு ஒரு மரக்கன்று’ என்ற தொனிப்பொருளில், இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, இரண்டு இலட்சம் மக்கன்றுகளை நடும் தேசிய நிகழ்வு, இன்று (11) மாலை 3.00 மணிக்கு, பத்தமுல்லை,சுஹூருபாயவின் கீழ் தளத்தில் இடம்பெறவுள்ளது.

ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேவின் எண்ணக்கருக்கமைய, பல வருடகாலமாக முன்னெடுக்கப்பட்டுவரும், நூறு மில்லியன்  மரக்கன்றுகளை நடும் இந்த வேலைத்திட்டத்தில், இன்று (11) இடம்பெறவுள்ள தேசிய நிகழ்வில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் பங்கேற்கவுள்ளனர்.

நிகழ்வுக்கு வரு​கைத்தரும் சகலருக்கும், இலவசமாக மாமரக்கன்றுகள், சீத்தா மரக்கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளன.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .