2025 ஜூன் 16, திங்கட்கிழமை

உடலியல் தண்டனையில் திருத்தம்

Janu   / 2025 ஜூன் 11 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடலியல் தண்டனை மூலம் பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் உள துன்புறுத்தல் அதிகரித்திருப்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே? எந்தவொரு துறையிலும் உடல் தண்டனை மூலம் துன்புறுத்தலுக்கு உள்ளாவதனை தடை செய்தல் மற்றும் உடல் துன்புறுத்தலுக்காகத் தண்டனை விதிப்பதற்கான ஏற்பாடுகளை விதிப்பதற்காக (19 ஆவது அதிகாரம்) தண்டனைச் சட்டக் கோவையை திருத்தம் செய்வதற்காக 2024-04-29 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஏற்புடைய பணிகளுக்கு சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட தண்டனைச் சட்டக் கோவை (திருத்தச்) சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும், அதற்கமைய செயற்பட முடியவில்லை.

குறித்த சட்டமூலத்தை துரிதமாக அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X