2025 ஜூன் 25, புதன்கிழமை

உபுல்தெனியவின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2025 ஜூன் 25 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி கைதியை சட்டவிரோதமாக விடுதலை செய்தார் என்ற குற்றஞ்சாட்டின் கீழ் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் விளக்கமறியல் ஜூலை 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் புதன்கிழமை (25) பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

 துஷார உபுல்தெனிய, நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அத்துல திலகரத்ன என்பவரை ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுதலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .