2025 ஜூன் 28, சனிக்கிழமை

உயிரிழந்தோரை அடையாளங்காண உறவினர்கள் வருகை

Editorial   / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் காயமடைந்தோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தமையையடுத்து அவர்களை அடையாளம் காண்பதற்காக, உயிரிழந்தோரின் உறவினர்கள் தற்பொழுது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வருகைத் தந்த வண்ணமுள்ளனர்.

அத்துடன் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவரையும் அடையாளம் காண்பதற்காக, அவர்களது உறவினர்கள் பலர் வைத்தியசாலை வளாகத்தைச் சூழ்ந்துள்ளனர்.

மக்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், வைத்தியசாலை வளாகத்தைச் சூழ முப்படையினர் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .