2025 ஜூன் 23, திங்கட்கிழமை

எம்.பியின் மகனால் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் கான்ஸ்டபிள்

Editorial   / 2019 ஜூன் 30 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிரகுமார அபேசேகரவின் மகனால் தாக்குதலுக்கு இலக்கான, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிளான சுசந்த அருணகுமார என்பவரே தாக்குலுக்கு இலக்காகியுள்ளதுடன், இது தொடர்பாக அவர் சிலாபம் ​பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .