2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

‘ஐ.தே.க வுடன் கூட்டிணைய மாட்டோம்’

Editorial   / 2019 ஏப்ரல் 01 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அரசாங்கம் ஒன்றை மீண்டும் அமைப்பதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணையாதென, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பதுளை பகுதியில் வைத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், எதிர்தரப்பிலிருந்து யாரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வது என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தீர்மானம் எடுக்கவில்லையென, அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி  ஜனாதிபதி வேட்பாளரின்  பெயரை அறிவிக்கும்  வரை, தமது ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை வெளியிடபோவதில்லையென, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X