2025 நவம்பர் 19, புதன்கிழமை

கட்டுநாயக்கவில் சிக்கல்: 3 விமானங்கள் மத்தலைக்கு திரும்பின

Editorial   / 2025 நவம்பர் 19 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அடர்ந்த மூடுபனி காரணமாக, விமான நிலையத்திற்கு தரையிறங்குவதற்காக, புதன்கிழமை (19) காலை வந்த மூன்று விமானங்கள், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

சீனாவின் குவாங்சோவிலிருந்து விமான நிலையத்தில் தரையிறங்க வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-881, மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

இந்தியாவின் மும்பையிலிருந்து விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-142, மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

இதேபோல், சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-142, மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. - கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளும் விமானம் 266 ஐ மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி விட நடவடிக்கை எடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X