Editorial / 2025 நவம்பர் 04 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், கலடிய பகுதியில் செவ்வாய்க்கிழமை (4) மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 53 வயதான எம்.எம். திலக் நிஹால் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கலடிய ஹயே கனுவ பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்தவர் ஆவார்.
இறந்தவர் கொட்டுகச்சிய, கஜுவத்த பகுதியைச் சேர்ந்தவர். சில வருடங்களுக்கு முன்பு அவரது முதல் மனைவி இறந்த பிறகு, கலடிய பகுதியில் மற்றொரு பெண்ணுடன் சுமார் ஒரு வருடமாக வசித்து வந்தார். தேவைக்காக வீட்டை விட்டு வெளியே சென்று சுமார் 20 மீட்டர் தூரம் சென்றதற்கு முன்பு யானை அவரைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்தவருக்கு முதல் திருமணத்தின் மூலம் மூன்று குழந்தைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நபர் தனது வாழ்வாதாரத்திற்காக தேங்காய் பறிக்கும் தொழிலாளி என்று கூறப்படுகிறது.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025