Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Freelancer / 2025 ஜூலை 11 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடன் தொல்லை காரணமாக இளங்குடும்பப் பெண் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் யாழ். சித்திரமோடி, இளவாலையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான அரிச்சந்திரன் வினோதா (வயது 36) என்பவராவார்.
கணவன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அவர் பலரிடம் கடன் பெற்றுள்ளார். கடன் தொல்லை காரணமாக நேற்று முன் புதன்கிழமை (09) இரவு அவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார். சாட்சிகளை இளவாலைப் பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago