2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கடவத்தை -மீரிகம ​ நெடுஞ்சாலை பணி ஆரம்பம்

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின், கடவத்தை தொடக்கம் மீரிகம வரையான பகுதியின் நிர்மாணப்பணிகள், நேற்று 15) ஆரம்பமாகியுள்ளன.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதற் பகுதி நிர்மாணப் பணியாக  இது அமைந்துள்ளது. சீனாவின் எக்சிம் வங்கின் 989 மில்லியன் டொலர் செலவில், மேற்படி நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படுகிறது.

அத்துடன், சீனாவின் Metallurgical Corporation  நிறுவனமே, இதன் பிரதான ஒப்பந்தக்காரராகச் செயற்படுகிறது.

மேற்படி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்தின்போது, 1,500 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகள்  கிடைக்குமென, இலங்கையிலுள்ள  சீன தூதரகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .