2025 ஜூன் 18, புதன்கிழமை

கண்டியில் 36 மணித்தியால நீர்வெட்டு

S.Renuka   / 2025 மே 28 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நகரின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை (28) பிற்பகல் 02 மணி முதல் நாளை வியாழக்கிழமை (29)  மறுதினம் வெள்ளிக்கிழமை (30) அதிகாலை 02 மணி வரை 36 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கண்டி மாநகர சபை தெரிவித்துள்ளது.

பேராதனை வீதி, வில்லியம் கோபல்லாவ மாவத்தை, நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகிலிருந்து நகர சபை சந்தி வரையான பகுதி மற்றும் அஸ்கிரிய, கண்டி நகர வாவியை சுற்றியுள்ள பகுதி, ரஜ பிஹில்ல மாவத்தை, பூவெலிகட, நெத்தே கும்புர, குருதெனிய, அம்பிட்டிய மற்றும் கண்டி நகர மத்தியில் உள்ள அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என்றும் கண்டி மாநகர சபை தெரிவித்துள்ளது.

கண்டி - குட்ஷெட் பஸ் நிலைய நிர்மாணப்பணிகளின் போது நீர்க்குழாய் கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .