2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கண்டியை விரிவுபடுத்த பேச்சு

Editorial   / 2019 ஜூன் 22 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நகரை விரிவுபடுத்தும் திட்டத்தை அமைப்பதற்கு ஜப்பான் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் கலாநிதி ஹிரோத்தோ இசுமிக்கும் இடையில், சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (21), அலரிமா​ளிகையில் இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் முதலீட்டு திட்டங்களை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை பற்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியிருந்தார்.

ஜப்பானின் சரித்திர முக்கியத்துவம் மிக்க ஹியோத்தோ நகரை, அதன் பாரம்பரிய மரபுரிமைகளை பாதுகாத்து நவீன மயப்படுத்தியதுபோல், கண்டி நகரை விரிவுபடுத்தும் வேலைத் திட்டத்தையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு சகல சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஜப்பான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமரின் ஆலோசகர் இச்சந்திப்பின்போது தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .