2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கதிர்காமம் தேவாலயத்திற்கு புதிய பஸ்நாயக்க நிலமே நியமனம்

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் கடமையாற்றும் பஸ்நாயக்க நிலமே ஆராச்சிகே திலின மதுசங்க அபேரத்ன மொனராகலை மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (09) அன்று இடம்பெற்ற தேர்தலில் புதிய பஸ்நாயக்க நிலமேவாக தெரிவு செய்யப்பட்டார்.

பஸ்நாயக்க நிலமே தெரிவுக்கான தேர்தலை பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் திரு.ஆர்.எம்.ஜி. சேனாரத்ன, மொனராகலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், புதிய பஸ்நாயக்க நிலமேயாக திரு.திலின மதுசங்க போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

புதிய பஸ்நாயக்க நிலமேயாக நியமிக்கப்பட்டுள்ள திலின மதுசங்க மஹத, மாத்தறை இசடீன் நகரை வசிப்பிடமாகவும், மாத்தறை ராகுல கல்லூரியின் பழைய மாணவராவார். இவர் தற்போது தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயாகவும் உள்ளார்.

சுமனசிறி குணதிலக்க


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .