2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

கமாண்டோ சலிந்தவுக்கு தோட்டாக்களை விற்ற இராணுவ அதிகாரி

Freelancer   / 2025 செப்டெம்பர் 11 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கமாண்டோ சலிந்த என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு T56 துப்பாக்கிக்ககான தோட்டாக்களை  விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் இன்று (11) மேற்கு வடக்கு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டார்.

குறிப்பிட்ட இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்ட நேரத்தில் முல்லைத்தீவில் உள்ள   இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

அவர் கணேமுல்ல கமாண்டோ படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்த காலத்தில், கமாண்டோ சாலிந்தாவுக்கு T56 துப்பாக்கிக்கு 260 தோட்டாக்களை இரண்டு சந்தர்ப்பங்களில் 650,000 ரூபாய்க்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கூடுதலாக, அவர் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளன.

கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .