2025 ஜூன் 23, திங்கட்கிழமை

காணாமற்போனவர் சடலமாக மீட்பு

Editorial   / 2019 ஜூன் 23 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிசை கடற்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் நபரொருவரின் சடலம் இன்று (23) மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் கடந்த 20ஆம் திகதியன்று மற்றுமொரு நபரொருவருடன் இணைந்து தெஹிவளை கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், பின்னர் கரைக்குத் திரும்பும் வேளையில் படகு விபத்துக்குள்ளானதில் ஒருவர் மூழ்கிய நிலையில் மற்றைய நபர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூன்று நாள்களாக நீரில் மூழ்கி காணாமற்போயிருந்த குறித்த நபரின் சடலம் இன்று கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .