Janu / 2024 ஜூலை 31 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தனது காதலியை சந்திக்க சென்ற இளைஞனை, கும்பல் ஒன்று தாக்கி நகை, பணம், கைத்தொலைபேசி, முச்சக்கரவண்டி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர் .
குறித்த இளைஞன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து உரும்பிராய்க்கு முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது வழியில் மற்றொரு முச்சக்கரவண்டியில் வந்த கும்பல் வழியை மறித்து வாளால் தாக்கி கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார்.
வாள்வெட்டு தாக்குதலின் பின்னர் தாம் மயங்கி விழுந்ததாகவும், சுயநினைவு திரும்பும் போது, தான் வாடகை அடிப்படையில் எடுத்து வந்த முச்சக்கரவண்டியும் காணாமல் போயுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் .
காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
12 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
4 hours ago