2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிணற்றிலிருந்து 46 வாள்கள் மீட்பு

Editorial   / 2019 மே 08 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலிகாவத்தை – கெத்தாராமை விளையாட்டரங்குக்கு அருகாமையில் பள்ளிவாயிலின் அருகில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து 46 வாள்களும், துப்பாக்கி ரவைகள் ஒரு தொகையும், துப்பாக்கியொன்றும் உள்ளடங்கலாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட பொருள்களனைத்தும் ஒரு சாக்குப்பையில் போடப்பட்டு குறித்த கிணற்றுக்குள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பையிலிருந்து போதைப்பொருள் என சந்தேகிக்கக்கூடிய வகையிலான பைக்கற்று ஒன்றும் காணப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்ததோடு, குறித்த பகுதியில் மேலதிக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .