Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 25 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியிலுள்ள கட்டடமொன்றில், நேற்று (24) மாலை ஏற்பட்ட தீ விபத்தில், 18 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
குறித்த நான்கு மாடிக் கட்டடத்தில், மாணவர்களுக்கானப் பயிற்சி வகுப்புகள் இடம்பெற்றுக்கொண்டு இருந்ததாகவும் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அதிலிருந்து தப்புவதற்காக, கட்டடத்தின் மேற்தளத்திலிருந்து மாணவர்கள் குதித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மாணவர்களில் பெரும்பாலானோர் 14 முதல் 17 வயதுக்குட்டவர்கள் என்றும் கட்டடத்தின் மேற்தளத்திலிருந்து குதித்த சில மாணவர்களை, பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர் என்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சில மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் இது வரை தெரியவில்லை என்றும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதகாவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
3 hours ago
3 hours ago