2025 ஜூன் 18, புதன்கிழமை

குருநாகல் மாநகரசபை செயற்பாடுகள் முழுமையாக ஸ்தம்பிதம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் மாநகரசபையின் சகல ஊழியர்களுக்கும் கடமைக்கு சமூகமளிக்காத நிலையில் இன்று (11) மாநகரசபையின்  செயற்பாடுகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

குருநாகல் மாநகரசபையின் உயர் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரையான சகலரும் சுகயீன விடுமுறை அறிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, நகர தூய்மைப்படுத்தல், குப்பை சேகரிப்பு, தீயணைப்பு பிரிவு உள்ளிட்ட மாநாகர சபையினால் வழங்கப்படும் சகல சேவைகளும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குருநாகல் பொதுச் சந்தை மற்றும் பொதுநூலகம் என்பன மூடப்பட்டிருந்த நிலையில், வர்த்தகர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, முற்பகல் 11 மணிக்கு சந்தை திக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .