2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

குருநாகல் மேயரின் மனு; ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம்

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  நகர மேயர் துஷார சஞ்சீச விதாரண  உட்பட ஐவரை கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக இடைக்காy தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான மனு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் இந்த மனுவிசாரணைக்கு வந்தது.

இதன்போது, குறித்த மனு தொடர்பில் ஆட்சேபனை தெரிவிப்பதற்கு எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதிவரை சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .