2025 ஜூன் 25, புதன்கிழமை

கெக்கிராவையில் அதி சக்தி வாய்ந்த வெடிப்பொருள்களுடன் இருவர் கைது

Editorial   / 2019 மே 26 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெக்கிராவ பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த முன்பள்ளி பாடசா​லை கட்டடமொன்றின் அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஒரு தொகை வெடிப்பொருள்களுடன், தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய, இருவர் இராணுவத்தினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் மடாடுகம பகுதியைச் சேர்ந்தவர்களென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேநகபர் ஒருவர் இந்தக் கட்டடத்தின் பொறுப்பானவராகக் கடமையாற்றி வந்துள்ளதுடன், இந்தக் கட்டடத்திலிருந்து C 4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிப்பொருள் 168 கிலோகிராம், மாக்கர் பேனைக்குள் வைக்கப்பட்டிருந்த பச்சை, மஞ்சள் நிற வயர்கள், டெட்டனேட்டர், தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட பிரிவினைவாத மத புத்தகங்கள் 5 என்பன இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .