2025 ஜூன் 25, புதன்கிழமை

கைக்குண்டுகள் மீட்பு: சந்தேகநபர் CIDயிடம் ஒப்படைப்பு

Editorial   / 2019 மே 25 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுரலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை வளாகத்தில் இருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நேற்று, பதுரலிய, திக்ஹேன பிரதேசத்தில் உள்ள பாடசாலை வளாகத்தில் கைக்குண்டுகள் சில மீட்கப்பட்ட சம்பவத்தில் 32 வயதுடைய ஹப்புஆரச்சிகே பவித்ர மதுசங்க என்பவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடம் பதுரலிய பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, தற்போது கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .