2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

கைதிகளைப் பார்வையிட 116 பேர் வருகைத் தந்துள்ளனர்

Editorial   / 2020 ஜூலை 13 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலுள்ள கைதிகளைப் பார்வையிடவென, 116 பேர் வருகைத் தந்துள்ளனர் என்றும் இவர்கள் அனைவரும் பல்வேறு பிரதேசங்களில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டில் ​தோன்றியுள்ள நிலையை பொதுவாக கட்டுபடுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (13) காலை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்தியநிலையத்தில் உள்ள கைதிகளைப் பார்வையிட வந்தவர்கள், பயணித்துள்ள பிரதேசங்களில் கொரோனா தொற்று சமூகத்தில் பரவியிருந்தால், அதனை இந்த வாரத்துக்குள் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .