2025 ஜூன் 25, புதன்கிழமை

கொடகவெலயில் விபத்து- 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 மே 24 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொடகவெல-கலஹிட்டிய பகுதியில், தனியார் பஸ் ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனம் ஒன்றின் மீது  மோதுண்டு விபத்துக்குள்ளானதில், பஸ்ஸில் பயணித்த 19 பேர் காயமடைந்த நிலையில், கொடகவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, இரக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (23)இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்று, மாத்தறை நோக்கி பயணித்தவர்களே, இவ்வாறு விபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஐவர், மேலதிக சிகிச்சைக்காக, கலவான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .